Friday 18 February 2011

கனவின் காதல்

கிளைகளின் நெரிசலில்
மெல்லிடை காற்றும் வெண்மதி இரவும்
கனவுலகத்தை கொடுத்திட
இச்சை அல்ல
இது பித்துக்காதல் என
கூடி பிணைந்தன இரண்டு கனவுகள்
ஆண் கனவு கேட்டது
என்னை அல்லாது பிறரை நினைத்து பார்ப்பதுண்டா
பெண் கனவு சொல்லிற்று
மூளைக்கும் மனதிற்க்கும் தான் சந்தேகம் இவற்றிர்க்கு அப்பாற்பட்ட கனவிற்க்கும் கூடவா ??
வேடிக்கையாய் ஒருவன் சுற்றி வந்தால்
அது வாடிக்கையாய் போய்
எங்கே
என் காதல் கனவு பொய்த்திடுமோ
என்ற அச்சத்தில் தான் - ஆண் கனவு
காதல் அல்ல
காமம்
தன் தலை கொணர்வதால் வரும்
குழப்பம் இது - பெண் கனவு
காமம் தான்
நான் கொண்ட காதலின் மேல் காமம் ,
அதன் மிகுதியால் ஏற்பட்ட
சஞ்சலம் - ஆண் கனவு
பெண் கனவோ - உடல் உறங்கி போனாலும்
இடைவிடாத மூட்சைப்போல் ,
நான் களைந்து சென்றாலும்
களையாது நினைவில் பதியும்
என் காதல்
சிறகொடிந்த பறவை
பறப்பதை விட்டுவிடுவதில்லை
மாறாக சிறகடிக்க துடிக்கும்
அது போல
ஒவ்வொரு இரவில் களைந்து சென்றாலும்
உள்ளுணர்வால்
என் காதல்
உன்னையே நினைத்து
மீண்டும் மீண்டும் உன்னையே அடைய முற்படுகிறது
ஆகாயம் பரந்த ஆலமரத்தை விழுது தாங்கிகொள்வதை போல ,
வருடி செல்லும் என் காதலை நினைவுகள் ஏந்தி கொள்கின்றன
இரு மனம் ஓர் உடல் நிலையில்
ஆண் காமத்தால் காதல் வயப்பட முனைகிறான்
பெண்ணோ காதலால் காமத்தை வென்றிட தன்னை இளைக்கின்றால்

No comments:

Post a Comment