Tuesday 13 September 2011

சிணுங்களில் கூட சித்திரம் படைத்திடும்
உன் கண்களில்
சாரலாய் இணைக்கபடுகின்றது
உன் புன்னகை
மழை தீட்டும் ஓவியம் ....முதல் முறை பார்க்கின்றேன்
தென்றல் வீசவே
சருகாய் உலருது என் இதயம்

Thursday 8 September 2011

காமம் காதலாகும் பொழுது .....


ஊடுருவி செல்லும் பார்வையில்

ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும்

ஏனோ உன் கண்களை பார்க்கையில் குருடனாகி போகின்றேன்

அனலாய் உன் மூச்சு காற்று என் தேகத்தை எரிக்கையில்

குளிரை பரப்பும் உன் முத்தங்கள்

தொடுதல் தேடுதலையாய் முடிந்திடுமோ என்ற அச்சம்,

தேடுதல் தொடுதலுக்கு மட்டும் , தொடர்வதற்கு அல்ல என்று ...

ஆண்மைக்கு தெரிந்தது ஆளுமைக்கு தெரியவில்லை

என் செய்வது என்னுள்ளும் சலனம் ...

ஆறரிவோடு பிறந்துவிட்டேன்

உள்ளுணர்வாய் தொடர்வதற்கு என்னுள் ஒன்றும் இல்லை

ஏனோ இத்தனை ஆத்மாக்கள் ...

இருக்கையில்

உன்னை பற்றிய தேடல் மட்டும் நிற்பதில்லை