பத்து விரல் இடைவேளையில்
பனிப்போர் நடக்கும்
தேடலின் வேதனை
ஆரம்பமாக
இன்பத்தின் எல்லை
இதோ
ஊமை விழிகள்
பேசும் வார்த்தை தான் எத்தனை
புரியாத காதல் மொழியில்
புதிதாக உணரும் காவியம் தான் எத்தனை
அத்தனையும் உயிரற்று போயின
என்னுள்
உந்தன் காதல் உயிர் பெற்றதால்